Saturday, 24 April 2021

சுதந்திரம் பெற்று தந்த பெருமை

 சுதந்திரம் பெற்று தந்த பெருமை 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற ஏக்கத்திலிருந்து
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே பள்ளு படுவோமே என்ற குதுகுளத்திலிருந்து
இன்று உலகமே வாழ்ந்தால் இந்தியாவைப் போல் வாழவேண்டும்
என்ற பெருமை கடலில் பயணிப்பதற்கு
காரணம் நமது சுதந்திரம்

ஒரு நாட்டின் தொழில், உற்பத்தி, தொழில்நுட்பம், அறிவியல், சொகுசு வாழ்க்கை எல்லாம் உச்சத்தில் இருந்தாலும் சுதந்திரம் இல்லை என்றால் அது உடல் இருந்தும் உயிர் இல்லாத நடைப்பிணம் என்றே அர்த்தம்.

இந்த இந்திய உடலில் உயிர் வலுவாக இருப்பதற்கு சுதந்திரம் தான் மூல காரணம்.

தங்கள் உயிரை மாய்த்து சுதந்திரம் பெற்று தந்த தியாகிகளின் கனவு ஒரு அர்த்தமுள்ள இந்திய தேசம்.

இன்று 127 கோடி மக்கள் இந்தியாவில் உயிர் வாழ்வதற்கு அன்று லச்சக்கணக்கான சுதந்திர தியாகிகளின் உயிர் தியாகம் தான் காரணம்.

அன்று சுதந்திர தியாகிகள் விதைத்த விதை இன்று நமக்கு நல்ல பயனை கொடுத்து கொண்டுயிருக்கிறது.

அந்த லச்சக்கணக்கான தியாகிகளின் தியாகம் அர்த்தமுளதாகி இருக்கிறது.

இன்று இந்தியா உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது

வேகமில்லை ஆனால் விவேகமிருக்கிறது
ஆர்பாட்டமில்லை ஆனால் அர்த்தமிருக்கிறது
மிடுப்பு இல்லை ஆனால் முன்னேற்றம் இருக்கிறது
ஜொஜொலிபியில்லை ஆனால் உண்மையான ஓட்டமிருக்கிறது

சுதந்திரத்திற்கு பின் கடந்த எழுபது ஆண்டுகளில் நமது நாடு பல மாற்றம்களையும் முன்னேற்றும்களையும் கண்டுயிருக்கிறது. இங்கே நான் பதினைந்து அருமையான பெருமைகளை மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. அறவழி போராட்டம்
2. மக்களாட்சி
3. சுமுகமான கூட்டாட்சி
4. சர்வ மத சம உரிமை
5. பல கட்சி அரசியல்
6. கட்டுகோப்பான ராணுவம்
7. ஆற்றல்மிக்க ஆட்சி பணியாளர்கள்
8. எதிரிகளையும் மன்னிக்கும் உயர்ந்த குணம்
9. பண்டைய கலாச்சார பாதுகாப்பு
10. அற்புதமான அரசியல் சட்டமைப்பு
11. நடுநிலையான நீதி துறை
12. உற்சாகமான ஊடகம்
13. சாதி வெறி ஒழிப்பு
14. பெண்கள் அடிமை அழிப்பு
15. விண்வெளி ஆராய்ச்சி

மகாத்மா காந்தியின் அஹிம்சா வெற்றி உலகிற்கு ஒரு புதிய பாதையை அமைத்து கொடுத்தது. வன்முறை இல்லாமல் வெறியாட்டம் இல்லாமல், ரத்தமில்லாமல், வெடிகுண்டு சத்தமில்லாமல் சுதந்திரம் பெறமுடியும் என உலகிற்கு நம்பிக்கை ஊட்டியது காந்தியின் அஹிம்சா எனும் காந்த சக்தி. காந்தியை பின்பற்றி அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங், தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா, கிழக்கு திமோரின் டெஸ்மாண்ட் டுட்டு, மியன்மாரின் ஆங் சங் சுகி போன்ற மிக பெரிய உலக தலைவர்களை உருவாகியிருக்கிறார்கள். அவர்களின் நாட்டில் ஒரு மிக பெரிய மாற்றத்தை உருவாகியிருக்கிறார்கள். சுதந்திரம் நமக்கு தந்த பெருமைகளில் அறவழி போராட்டம் முதன்மையானது  !

சுதந்திரத்துற்கு முன்பே நமது தலைவர்கள் இந்தியா மக்களாட்சி நாடாகவேண்டும் என்று கனவு திட்டம் தீட்டினார்கள். அப்போதும் சரி சுதந்திரம் அடைந்து பிறகும் சரி நிறைய அறிவாளிகள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இந்தியா முழு நாடாக நீண்ட நாள்கள் நிலைக்காது என்று சத்தமாக பேசிவந்தார்கள். இப்பொது எழுபது வருடங்கள் கடந்து விட்டோம். இந்தியா வெற்றிநடைப்போடு கொண்டுயிருக்கிறது. இந்தியா இனி காலி என்று பேசியவர்கள் தான் காலியனார்கள்.  சுதந்திரம் நமக்கு தந்த பெருமைகளில்  மக்களாட்சி  மிகவும் மாகத்துவமானது !

29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் 127 கோடி மக்கள்யென மிக பெரிய நாட்டில் சுமுகமான கூட்டாட்சி சுதந்திரம் தந்த பெருமை

ஆறு பெரிய மதங்கள் சுமார் 4000 சாதிகள் கொண்ட இந்தியா இன்று வீர நடைப்போடுவதற்கு காரணம் நமது சுதந்திரம். இவை சுதந்திரம் நமக்கு தந்த பெருமை.

ஏழு அங்கிகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், 49அங்கிகரிக்கப்பட்ட மாநில  அரசியல் கட்சிகள்.

இவையில்லாமல் நூற்றுக்கணக்கான அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள். பல தரப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையே நாட்டின் முன்னேற்றம்.இதுவும் சுதந்திரம் தந்த பெருமை.

எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் சக்தி உலகில் வெகு சில நாட்டு ராணுவ வீரர்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வெகு சில ராணுவத்தில் இந்திய ராணுவம் முதன்மையானது. எதிரியின் துப்பாக்கி குண்டுகளுக்கும் பீரங்கி சத்துக்கும் பயந்து ஓடாத ராணுவம் இந்திய ராணுவம். இதுவும் சுதந்திரம் தந்த பெருமை.

லஞ்ச ஊழல் என்று இந்திய ஆட்சி சில நேரங்களில் தலைகுனித்தாலும், சத்தமில்லாமல் பல இந்திய ஆட்சி பணியாளர்கள் நாட்டிற்கு நல்வழி வகுத்துக்கொண்டுயிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு ஒரு டி.என். சேஷன் போல், காவல்துறைக்கு ஒரு விஜயகுமார் போல் தணிக்கை துறைக்கு ஒரு வினோத் ராய் போல் மகளிர் சக்திக்கு ஒரு கிரண் பேடி போல் இந்திய அரசாங்க பணியாளர்கள் சுதந்திரம் தந்த பெருமை

சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தாநிய வீரர்களை மன்னித்து உயிர் பிட்சை வழங்கி பெருமை இந்தியாவிற்கு கொடுத்தது. இதுவும் நமக்கு சுதந்திரம் தந்த பெருமை. தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை தீவரவாதிகளை ஏவி கொல்லும் எதிரிகளுக்கும் நாம் அமைதி புறாவை தூது அனுப்பும் மனப்பக்குவத்தை கொடுத்து பெருமை சேர்க்கிறது நமது சுதந்திரம்.

யோகா, ஆயுர்வேதம், முன்னோர் வழிபாடு, கடவுள் வழிபாடு, இயற்கை வழிபாடு போன்ற பண்டைய கலாச்சாரத்தை பாதுகாத்து இன்று உலகமே இவற்றை போற்றி பின்பற்றி வருகிறது. இதுவும் நமது சுதந்திரம் தந்த பெருமை.

பல நாடுகளின் அரசியல் சட்டமைப்புகளை ஆராய்ந்து இந்தியாவிற்கு ஏற்ற ஒரு சட்டமைப்பை உருவாக்கி கொடுத்தவர்கள்  நமது சுதந்திர போராட்ட வீரர்கள். இதுவும் நமக்கு சுதந்திரம் தந்த பெருமை.

நீதி துறை நாட்டின் முதுகுஎலும்பாக திகழ்கிறது. ஏழைக்கும் பாலைக்கும் ஒரு அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் அது நீதி துறையினால்தான். இதுவும் நமக்கு சுதந்திரம் தந்த பெருமை.

உற்சாகமான ஊடகம் இந்தியாவின் தனிச்சிறப்பு. பல ஊழல்களையும் இன்னல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெருமை நமது ஊடகங்களுக்கு சாரும். பல சுதந்திர போராட்ட வீரர்கள் ஊடகம் நடத்தி ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தார்கள். இதுவும் நமக்கு சுதந்திரம் தந்த பெருமை.

சாதி வெறி இன்னும் இருந்தாலும் அதன் வீரியத்தை வீழ்த்திய பெருமை நமது சுதந்திரத்திற்கு சாரும்.

பெண்கள் அடிமை ஒழிப்பும் சுதந்திரம்  தந்த பெருமை

விண்வெளி ஆராய்ச்சி அறிவியல் முன்னேற்றும் தொழிநுட்பம் போன்றவை இன்று நமக்கு பெருமை அளிப்பதற்கு மூல காரணம் நமது சுதந்திரம்

நமது பெருமைக்கெல்லாம் அடித்தளம் அமைத்து கொடுத்தது சுதந்திரம்
நமது வளர்ச்சிக்கெல்லாம் வழி வகுத்துக்கொடுத்தது சுதந்திரம்
நமது மகிழ்ச்சிக்கெல்லாம் மார்க்கம் கொடுத்தது சுதந்திரம்
எல்லா பெருமைகளையும் தந்த சுதந்திரத்தை பெருமை அடையச்செய்வோம் !

1 comment:

  1. Pokies and casinos - Poormans Casino
    Pokies 1xbet korea and casinos online. In addition, you can also 먹튀신고 play 부산건마 for real 포커 칩 money on Pokies Casino without having to wager any 먹튀사이트 조회 money!

    ReplyDelete