Saturday, 24 April 2021

புத்தகங்களை வசிப்பவர்கள் சக மனிதர்களை நேசிப்பவர்கள்

 புத்தகங்களை வசிப்பவர்கள் 

சக மனிதர்களை நேசிப்பவர்கள்
மற்ற உயிர் இனங்களை மதிப்பவர்கள்
அமைதியை விரும்புவர்கள்
கலாச்சாரதை கட்டிக்காப்பவர்கள்
பண்பாட்டை பாதுகாப்பவர்கள்   


என பல விதமான நற்குணங்களை கொண்டவர்கள். சில வசிப்போர் சமூக நலத்திற்கு எதிராகவும் செயல்படுவார்கள். புத்தகங்கள் உலக சமுதாயம்  என்னும்  விதையின் வளர்ச்சிகாண நீர், உரம், காற்று, வெப்பம் போன்ற மிக அவசியமான தேவை. ஒரு நல்ல புத்தகம் ஒரு கெட்ட குணங்கள் கொண்ட மனிதனை மாற்றி நல்வழிப்படுத்த முடியும். புத்தகங்களின் வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்சிக்கான அறிகுறி. என்ன புத்தகம் வெளிவருகிறது  என்று  சொன்னால் அந்த புத்தகம் வெளியிடுகிற சமூகத்தின் தன்மையை கூறமுடியும். அத்தகைய சக்தி வாய்ந்தது புத்தகம். 



புத்தகங்களின் வரலாறை தோண்டுவது மிகவும் கடினம். ஏன்யென்றால் இன்று இருக்கும் காகித புத்தகங்களுக்கு முன்பு பல விதமான அறிவை வளர்க்கும் வழிகளும், செய்திகளை பரப்பும் உத்திகளும் நிறைந்து காணப்பட்டது.  மனித இனம் தோன்றியதில் இருந்து இன்று வரை ஏதாவது ஒரு வகையில் அறிவும் செய்திகளும் பரவிக் கொண்டே தான் இருந்துயிருக்கிறது. 

அண்டைய காலத்து மேசொபோடமியா  (Mesopotamia) இன்றைய காலத்து ஈராக்கில் ஈர களி மண்ணில் calamus என்ற முக்குவோன வடிவு  கருவியை வைத்து குறியீடுகளை உருவாகினார்கள். ஐத்தையிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த clay tablets என்ற முறை இருந்தது. இவைகள் பத்துஒனெபாதாம் நூற்றாண்டம் வரை உபயோகத்தில் இருந்தது. அசிரியாவின் மன்னர்கள் இந்த     clay tablets களை போகிசமாக பாதுகாத்து வந்தார்கள். இவர்கள் புத்தங்களை வகைபடுத்துதல் (classification) மற்றும்  பதிப்புரிமை போன்றவைக்கு பயிற்சி பட்றைகள் நடத்தினார்கள்.


இதைப்போலேவே நமது ஓலை சுவடிகள். பல்லயிரகனக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஓலை சுவடிகள் தமிழ் கலை, கலாச்சாரம், மருத்துவம், அறிவியல், மற்றும் ஏனைய அறிவு பாடங்களை அற்புதமாக ஓலை சுவடியில் படைதிருக்கிறார்கள்.

இன்று e புக்கள் வந்து விட்டன. உலகத்தில் எந்த முலையில் இருந்தாலும் நமது இனிய  தமிழ் மொழி ஆனாலும் சரி மாற்ற மொழியானாலும் சரி நாம் இ  புத்தங்களை கொண்டு படிக்கமுடியும். இதற்கு இடம், காலம், நேரம், மொழி போன்ற வேறுபாடுகள் கிடையாது.  

தமிழ் சமுதாயத்திற்கு உலக பெருமை வாங்கி தந்தது திருவள்ளுவரின் திருக்குறள். இரண்டு அடியில் உலககிற்கு யாவற்றையும் எடுத்து உணர்த்திய உலக பொதுமுறை திருக்குறள். வியக்காத ஆள்யில்லை; குறிபிடாத அகில உலக அறிஞர்கள் இல்லை. நான் புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து கொண்டு யிருந்த போது என்னுடைய துணை வேந்தர் அவர்கள் அன்றைய குடியரசு தலைவர் டாக்டர்.ஷங்கர் தாயால் ஷர்மாவை உலகம் ஒரு குடும்பம் என்ற  கருத்தரங்கதிற்கு  அழைப்பதற்காக என்னை அழைத்து சென்றார். நான் தமிழன் என்று அறிந்த நமது குடியரசு தலைவர் என்னிடம் கேட்டார் "திருவள்ளுவர் உலகம் ஒரு குடும்பம் என்பதை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று வினவினார். எனக்கு தெரியவில்லை என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னார் "திருவள்ளுவர் சொல்லாத நல்ல செய்தி உலகில் ஏதுவும் இல்லை" உண்மை தான். நமது தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள் அற்புதமான அறிவை கொடுத்தது, கொடுத்துக் கொண்டுயிருக்கிறது  கொடுக்கும்.

எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு

பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தமணி, குண்டலகேசி மற்றும் வளையாபதி போன்ற காப்பிய இலக்கியங்கள் தமிழில் இருப்பது நமக்கெல்லாம் சிறப்பு.

நமது இலக்கியங்களை வசிப்போம்; இதயத்திற்கு இதமளிபோம்; இனங்கள் எல்லாவற்றையும் நேசிபோம்.    

தமிழ் மக்களின் மனதை தொட்ட நிறைய புத்தகங்கள் குவிந்து கிடக்கிறது. அதில் சிலவற்றை நான் சொல்கிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன். இதை பெரும்பாலும் தமிழ் குடும்பங்கள் ஒரு தெய்விக நூலைப் போல் படித்து பாதுகாத்து வருகிறார்கள்.

கதையையும் நிஜமாக நம் கண் முன்னால் நிறுத்தகூடிய சக்தி வாய்ந்த சாண்டில்யனின் கடல் புறா

நமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் கட்டிக் காக்கா உந்து சக்தியாக விளங்கும் கவிஞர் கண்ணதாசனின் அர்தமுள்ள ஹிந்து மதம்.

மு.மேத்தாவின் சோழ நிலா

சுஜாதாவின் கம்ப்யூட்டர் கிராமம்

அப்துல் ரகுமாமானின் கவிதைகள். குறிப்பாக  பூக்காலம்
 
கவிபேரசுவின் மூன்றாம் உலக போர் 

தமிழருவி மணியனின் ஊருக்கு நல்லது செய்வேன்

s .ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், கதாவிலாசம்

ஆங்கிலத்தில்  ஜேர்மன் நாட்டின் theodore adorno max horkheimer  எழுதிய dialectic englightenment . 1944 ல் வெளிவந்த இந்த புத்தகம் ஒரு பேரறிவு தாக்கத்தை உண்டாக்கும். மிக அற்புதமாக சமூக மாற்றத்தை வசைப்பாடியிருக்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் எழுதிய பொருளாதார தத்துவத்தை அவர்களுடைய காலத்திற்கு தகுந்த மாதரி என்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை விளக்கி இருப்பார்கள்.

டேனியல் பெல்லின் தி Post Industrial சொசிஎட்டி
Alvin Toffler இன் third wave, future shock
Robert Naisibitt Mega  Trends     
Erick Fomm in தி Sane Society    
ஹில்லரி  rose இன் love, power & knowledge
பிரான்சிஸ்  fukyuma வின் the great disruption

  
வளர்ந்து வரும் உலக வன்முறைகளும் தீவிரவதாங்களும் கூண்டொடு அழிய வேண்டுமென்றல், அகிலம் முழுவதும் அன்பு பரவ வேண்டுமேன்றால்   புத்தங்களை வசிபோம்; சக மனிதர்களை நேசிபோம்.    

No comments:

Post a Comment