Saturday, 24 April 2021

அடுத்த அடி

 அடுத்த அடி 


பல வருட கனவுகளுக்கு பின்பும், இரண்டு வருட கடின உழைப்புக்கு பின்பும் பனிரென்டாம் வகுப்பில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் மாணவ செல்வங்களே வணக்கம். வாழ்த்துக்கள். 

உங்களுடைய மகிழ்ச்சிக்கு பின்னால் கவலையும் படிந்துயிருப்பதை என்னால் அறியமுடிகிறது. அடுத்த அடி வைப்பதற்கு முன் பல யோசனைகள்  உங்களுக்கு இருக்கும்.

என்ன பட்டப்படிப்பு படிக்கலாம்? அந்த பட்டப்படிப்புக்கு பிறகு என்ன எதிர்காலம் இருக்கிறது? வேலை கிடைக்குமா? கிடைத்தாலும் நல்ல சம்பளம் கிடைக்குமா? போன்ற கேள்விகள் உங்களிடையே நிறைய இருக்கும். எல்லா கேள்விகளுக்கும்  பதில் சொல்வதற்கும் உங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டியிடவும் இந்த நிகழ்ச்சி அமையும் என நம்புகிறேன்.

கல்லூரி படிப்பு என்பது உங்கள் வாழ்கையில் ஒரு மிக முக்கியமான தருணம்.இதுவரை பெற்றோரரின் முழு பாதுகாப்பிலும் பள்ளியின் கட்டுப்பாட்டில் இருந்த உங்களுக்கு கல்லூரியில் நுழையும் போது நிறைய சுதந்திரம் கிடைக்கும். இந்த சுதந்திரத்துடன் முழு பொறுப்பும் வரவிருக்கிறது. உங்கள் வாழ்க்கையை  சீராகவும் செழிப்பாகவும் அமைத்து கொள்வது உங்களுடைய கடமை.

பட்டப்படிப்பு என்பது வாழ்கையில் முன்னேர்வதற்கு ஒரு ஏணி.
அந்த ஏணியை வைத்து கொண்டு நீங்கள் மேலும் உயரவேண்டும்.   அதற்குகாக உங்களுக்கு தகுந்த துறையை தேர்ந்துயெடுக்க வேண்டும். நேரத்தை வீணாக்கதிர்கள்

கலை மற்றும் அறிவியல்துறைகள் உலகில் எப்பொதும் வரவேற்க்கபடுகிறது. B.A English, தமிழ், ஹிந்தி, சமஸ்க்ரிதம், ஹிஸ்டரி, பிலோசொபி,எகாநோமிக்ஸ், சைகோலஜி, சமூகவியல், political science, journalism, social work B.P.ED, B.LIBS,   B.Com, B.Com C.A, corporate  secretaryship,  BBA, B.SC  இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கணினிவியல்,  உயிர் தொழில்நுட்பம், மைக்ரோ பயோலாஜி, Visual Communication, fashion technology, nutrition,dietetics, Hotel Management, catering sciences, Acturial Sciences, information technology,  environmental sciences, bio informatics, statistics, BCA, BFA,   போன்ற பட்டப்படிப்புகள் இருக்கிறது. இவை பெரும்பாலும் மூன்று வருட படிப்புக்கள்தான்.

எப்படி பட்டப்படிப்பு முக்கியோமோ அதைப்போல் படிக்கும் கல்லூரியும் மிக முக்கியம். நல்ல பேரசிராயர்களையும் சூழ்நிலைகளையும்  கொண்ட கல்லூரியை தேர்ந்து எடுக்கவேண்டும். பல வருடங்கள் கண்ட கல்லூரி, தேசிய தர மற்றும் கட்டுப்பட்டு குழுமத்தால்  மதிப்பீடு செய்யப்பட்டு "A" தரம் பெற்றுயிருந்தால் மிகவும் நன்று. கல்லூரியின் பழைய மாணவர்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை பற்றியும் அறியவேண்டும். அவர்களின் வளர்ச்சியில் கல்லூரியின் பங்குயை அறிய வேண்டும்.

இந்நாள் மாணவர்களை கண்டு அவர்களிடம் கல்லூரியில் நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களுடைய அணுபவம் உங்களுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியம். பேராசிரியர்கள் எப்படி, பாடம் எப்படி, கல்லூரியில் இருக்கும் ஏனைய முன்னேற்ற பாதைகள் என்ன என்ன, திறன் மேம்பாட்டு திட்டங்கள் என்ன, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது எப்படி, விளையாட்டு துறையில் என்ன வசதிகள் கல்லூரியில் இருக்கிறது போன்று கேள்விகளை நீங்கள் இந்நாள் மாணவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

விடுதியில் தங்கி படிக்க நினைக்கும் மாணவர்கள் அங்குள்ள சௌரியங்களையும்   அசௌரியங்களையும் அறிந்து  கொள்ளவேண்டும். ராக்கிங் என்பது இப்பொது வெகுவாக குறைந்து இருந்தாலும் புதிய மாணவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும். ராக்கிங் எதுவும் இருப்பின் உடனடியாக கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளரிடம் எடுத்து செல்ல வேண்டும்.



கல்லூரியில் படிக்கும் போது பல வித திறமைகளை நீங்கள் மேம்படுத்தி  கொள்ள வேண்டும். இசை, நடனம், உடற்பயற்சி, யோகா, விளையாட்டு, பேச்சு பட்டறை, கவிதை, கட்டுரை எழுதுவது, பொது அறிவை வள்ளர்பது, புத்தாக்க கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு படிப்புகள் என நீங்கள் உங்களை தூங்குகிற நேரத்தை தவிர மற்ற நேரங்களில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

நீங்கள் ஊக்கத்தொகை  (scholarship) பெற்று பட்டப்படிப்பையும் மேற்ப்படிப்பையும் தொடரவேண்டும். ஊக்கத்தொகை பெறுவதால் உங்களுக்கு அதிக பொறுப்பு வரும். அது உங்களுக்கு ஒரு ஆண்டு தோறும் முன்னேற்றம் அடைவதற்கு வழிவகை செய்யும். உங்களுடைய பெற்றோரை நிதி தேவைகளுக்கு சர்ந்துயிருப்பதை சற்று குறைக்கும்.

ஊக்கத்தொகை  பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் அல்லது தினசரிகளை பார்ப்பது அவசியம்.

நேரத்தை சமாளிக்க தெரிந்தவர்கள் பகுதி நேர வேலைக்கும் செல்லாம்.

ஒவ்வாரு துறைக்கும் தனித்துவம் இருக்கிறது. பட்டப்படிப்பு முடித்த பிறகு பள்ளிகளில் ஆசிரியராக சேரலாம். அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு சேரலாம். மருந்து மற்றும் வேதியல் பொருள்கள் விற்பனையாளராக செல்லலாம். B .Com முடித்த மாணவர்கள் வணிக இல்லங்களில் கணக்கு பார்பதற்கு சேரலாம். sales மற்றும் marketingக்கு செல்லலாம். கணினிவியல் முடித்த மாணவர்கள் மென்பொருள் தயார்பிதலும் வன்பொருள் சரிசெய்வதிலும் சேரலாம். முதுகலை படிப்புக்கும் சேரலாம். ஆசிரியர் பயற்சி படிப்பு (B.Ed) சேரலாம், சட்டம் பயலாலம். முதுகலை மற்றும் ஆய்வு படிப்புக்கும் செல்ல விருப்பம் உள்ள மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் பேராசிரியர் பணிக்கு செல்லலாம்.

பட்டப்படிப்பு முடித்த பிறகு மூன்று வித வழிகள் இருக்கிறது. ஒன்று  வேலைக்கு செல்வது. இரண்டு, மேற்ப்படிப்புக்கு செல்வது. மூன்றாவது, போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது.

இதில் எந்த வழி உங்களுக்கு உங்கந்தது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.தயவு செய்து குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டாம். இந்த மூன்று வழிகளில் ஒன்றை தேர்ந்துயெடுக்கும் போது உங்களுடைய குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிகளில் நட்டமும் வசதியும் இல்லாதவர்களுக்கு முதல் வழியே சல சிறந்தது. வேலையில் சேர்வதன் மூலம் வருமானம் மட்டுமின்றி வாழ்கைக்கு தேவையான அனுபவங்களும் கிடைக்கும். வேலை செய்துக்கொண்டும் மேற்படிப்பு படிக்கலாம். சில வருடங்கள் பணியாற்றிவிட்டு மேற்படிப்புக்கும்  செல்லலாம்.

வெளிநாட்டுக்கு சென்றும் பட்டப்படிப்பு படிக்கலாம். இது உங்களுக்கு உலக அணுபவத்தை கொடுத்தாலும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இன்றைய சூழலில் வெளிநாடுகளில் படிப்பது பாதுகாப்பு மிகவும் சவாலாக இருக்கிறது. அதனால் மாணவர்கள் பட்டப்படிப்பை உள்நாட்டில் படிப்பது நல்லது.

தகவல் தொழிநுட்ப உபகாரணங்களை பயன்படுத்துவதை நீங்கள் மிதமாக பயன்படுத்தவேண்டும். நீண்ட நேரங்கள் கைப்பேசி, மடிக்கணினி மற்றும் கணினி பயன்படுத்துவதால் உடல் நலம் சிதைவது மட்டுமின்றி வாழ்க்கையில் பல சிக்கல்களை உண்டுப்பணும். நிறைய மாணவர்கள் தகவல் தொழிற்நுட்ப உபகாரணங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் உடல் நலம் வெகுவாக பாதிப்பது மற்றுமின்றி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் வெகுவாக பாதிக்கிறது.

ஆகையால் மாணவர்கள் தகவல் தொழிநுட்ப உபகாரணங்களை உபயோகப்படுதுவத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

கல்லூரியில் படிக்கும் போது மற்ற கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் அவசியம் கலந்து கொள்ளவேண்டும். மற்ற கல்லூரிகளுக்கு செல்லும் போது உங்களுக்கு நிறைய புது அணுபவங்கள் கிடைக்கும். அந்த கல்லூரியில் நடக்கும் புதிய திட்டங்கள் நடைமுறைகள் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அறிவும் விரிவுவடையும். உங்கள் கல்லூரியில் இல்லாத சில நல்ல விஷியங்கள் உங்களுக்கு புரியம். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் நல்ல நண்பர்களை தேர்ந்துயெடுங்கள்.

இப்படி நீங்கள் வெளியில் செல்லும் போது திடமான அணுபவங்குகளும் அறிவும் கிடைக்கும். கருத்தரங்கள், மாநாடுகள், கலந்துக் கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்க வேண்டும். ஆய்விதல்களில் (Journal) கட்டுரை எழுத வேண்டும்.

நூலகம் என்பது ஒவ்வாரு மாணவரின் வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான அங்கம். பள்ளிக்கூட படிப்பில் ஆசிரியர்கள் நடத்தும் படத்தையும் கொடுத்திருக்கிற புத்தகத்தை படித்தால் மட்டும் போதுமானதாக இருக்கும். ஆனால் கல்லூரியில் நீங்கள் பேராசிரியர் நடத்தும் பாடத்தை பல புத்தகங்களை படித்து உங்களுடைய கருத்துகளை பதியவேண்டும். இதற்கு நூலகம் செல்வது அவசியம். பாடம் சம்பந்தப்பட்டபுத்தகங்களை தவிர பொது அறிவை வள்ளர்கும் புத்தகங்களையும் படிக்க வேண்டும். தினசரிகள், வார இதழ்கள், மாத இதழ்கள், journals, encyclopedia போன்றவைகளை நூலகத்தில் படிக்கலாம். இப்பொது digital லைப்ரரி வந்துவிட்டது. இதன் மூலம் உலகில் உள்ள எல்லா புத்தகங்கள், journals, encyclopedia, magazines படிக்க முடியும். தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் நூலகத்தில் படிக்க வேண்டும்.

கல்லூரியில் பல வித மன்றங்கள் மற்றும் சங்கங்கள் இருக்கும். குறிப்பாக பசுமை மன்றம் (Environment Club), யூத் ரெட் கிராஸ், Rotaract கிளப், லியோ கிளப், social club இருக்கிறது. இவை இல்லாமல் NCC, NSS போன்றவையும் உள்ளது. இவை ஒன்றில் சேருவது கட்டாயம். இதற்கு மதிப்பெண்களும் உண்டு. மன்றங்களும் சங்ககளும் ஒவ்வாரு மாணவரின் வாழ்க்கையின் வள்ளர்ச்சியில் முக்கிய பங்கு வகுக்கிறது.


கணினி ஆய்வு கூடம் நிறைய கல்லூரிகளில் இருக்கிறது. இங்கு உங்களுக்கு இணையத்தள வசதிகளும் இருக்கும். கணினி இன்று ஒரு தவிரக்க முடியாத சக்தியாக மாறிவிட் டது. கணினி அறிவு பெறுவது முதல் கடமையாக இருக்கிறது. ஆனால் கணினியில் அதிக நேரம் தொடர்ந்து செலவழிப்பதை தவிர்க்கவும்.

பட்டப்படிப்பு ஒரு அங்கீகாரம் தானே தவிர அது மட்டும் ம் வைத்து கொண்டு உங்களுக்கு எல்லா மதிப்பும் கிடைக்காது. வாழ்க்கையின் உண்மையான வளர்ச்சிக்கு உங்களுக்கு ஆளுமை (Personality) திறன் இருக்கவேண்டும். இதை நீங்கள் படிக்கும் போதே வளர்த்து கொள்ளவேண்டும்.

பட்டப்படிப்புடன் ஆளுமை திறன், தகவல் தொடர்பு திறன், நம்பிக்கை நிலை  (confidence level), பண்பாட்டு திறன் (Cultural skill), தொழில்நுட்ப திறன் (Technology skill) போன்றவை இருந்தால் உலகம் உங்கள் கையில்.







     

No comments:

Post a Comment