Saturday, 24 April 2021

சுதந்திரம் பெற்று தந்த பெருமை

 சுதந்திரம் பெற்று தந்த பெருமை 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற ஏக்கத்திலிருந்து
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே பள்ளு படுவோமே என்ற குதுகுளத்திலிருந்து
இன்று உலகமே வாழ்ந்தால் இந்தியாவைப் போல் வாழவேண்டும்
என்ற பெருமை கடலில் பயணிப்பதற்கு
காரணம் நமது சுதந்திரம்

ஒரு நாட்டின் தொழில், உற்பத்தி, தொழில்நுட்பம், அறிவியல், சொகுசு வாழ்க்கை எல்லாம் உச்சத்தில் இருந்தாலும் சுதந்திரம் இல்லை என்றால் அது உடல் இருந்தும் உயிர் இல்லாத நடைப்பிணம் என்றே அர்த்தம்.

இந்த இந்திய உடலில் உயிர் வலுவாக இருப்பதற்கு சுதந்திரம் தான் மூல காரணம்.

தங்கள் உயிரை மாய்த்து சுதந்திரம் பெற்று தந்த தியாகிகளின் கனவு ஒரு அர்த்தமுள்ள இந்திய தேசம்.

இன்று 127 கோடி மக்கள் இந்தியாவில் உயிர் வாழ்வதற்கு அன்று லச்சக்கணக்கான சுதந்திர தியாகிகளின் உயிர் தியாகம் தான் காரணம்.

அன்று சுதந்திர தியாகிகள் விதைத்த விதை இன்று நமக்கு நல்ல பயனை கொடுத்து கொண்டுயிருக்கிறது.

அந்த லச்சக்கணக்கான தியாகிகளின் தியாகம் அர்த்தமுளதாகி இருக்கிறது.

இன்று இந்தியா உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது

வேகமில்லை ஆனால் விவேகமிருக்கிறது
ஆர்பாட்டமில்லை ஆனால் அர்த்தமிருக்கிறது
மிடுப்பு இல்லை ஆனால் முன்னேற்றம் இருக்கிறது
ஜொஜொலிபியில்லை ஆனால் உண்மையான ஓட்டமிருக்கிறது

சுதந்திரத்திற்கு பின் கடந்த எழுபது ஆண்டுகளில் நமது நாடு பல மாற்றம்களையும் முன்னேற்றும்களையும் கண்டுயிருக்கிறது. இங்கே நான் பதினைந்து அருமையான பெருமைகளை மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. அறவழி போராட்டம்
2. மக்களாட்சி
3. சுமுகமான கூட்டாட்சி
4. சர்வ மத சம உரிமை
5. பல கட்சி அரசியல்
6. கட்டுகோப்பான ராணுவம்
7. ஆற்றல்மிக்க ஆட்சி பணியாளர்கள்
8. எதிரிகளையும் மன்னிக்கும் உயர்ந்த குணம்
9. பண்டைய கலாச்சார பாதுகாப்பு
10. அற்புதமான அரசியல் சட்டமைப்பு
11. நடுநிலையான நீதி துறை
12. உற்சாகமான ஊடகம்
13. சாதி வெறி ஒழிப்பு
14. பெண்கள் அடிமை அழிப்பு
15. விண்வெளி ஆராய்ச்சி

மகாத்மா காந்தியின் அஹிம்சா வெற்றி உலகிற்கு ஒரு புதிய பாதையை அமைத்து கொடுத்தது. வன்முறை இல்லாமல் வெறியாட்டம் இல்லாமல், ரத்தமில்லாமல், வெடிகுண்டு சத்தமில்லாமல் சுதந்திரம் பெறமுடியும் என உலகிற்கு நம்பிக்கை ஊட்டியது காந்தியின் அஹிம்சா எனும் காந்த சக்தி. காந்தியை பின்பற்றி அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங், தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா, கிழக்கு திமோரின் டெஸ்மாண்ட் டுட்டு, மியன்மாரின் ஆங் சங் சுகி போன்ற மிக பெரிய உலக தலைவர்களை உருவாகியிருக்கிறார்கள். அவர்களின் நாட்டில் ஒரு மிக பெரிய மாற்றத்தை உருவாகியிருக்கிறார்கள். சுதந்திரம் நமக்கு தந்த பெருமைகளில் அறவழி போராட்டம் முதன்மையானது  !

சுதந்திரத்துற்கு முன்பே நமது தலைவர்கள் இந்தியா மக்களாட்சி நாடாகவேண்டும் என்று கனவு திட்டம் தீட்டினார்கள். அப்போதும் சரி சுதந்திரம் அடைந்து பிறகும் சரி நிறைய அறிவாளிகள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இந்தியா முழு நாடாக நீண்ட நாள்கள் நிலைக்காது என்று சத்தமாக பேசிவந்தார்கள். இப்பொது எழுபது வருடங்கள் கடந்து விட்டோம். இந்தியா வெற்றிநடைப்போடு கொண்டுயிருக்கிறது. இந்தியா இனி காலி என்று பேசியவர்கள் தான் காலியனார்கள்.  சுதந்திரம் நமக்கு தந்த பெருமைகளில்  மக்களாட்சி  மிகவும் மாகத்துவமானது !

29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் 127 கோடி மக்கள்யென மிக பெரிய நாட்டில் சுமுகமான கூட்டாட்சி சுதந்திரம் தந்த பெருமை

ஆறு பெரிய மதங்கள் சுமார் 4000 சாதிகள் கொண்ட இந்தியா இன்று வீர நடைப்போடுவதற்கு காரணம் நமது சுதந்திரம். இவை சுதந்திரம் நமக்கு தந்த பெருமை.

ஏழு அங்கிகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், 49அங்கிகரிக்கப்பட்ட மாநில  அரசியல் கட்சிகள்.

இவையில்லாமல் நூற்றுக்கணக்கான அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள். பல தரப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையே நாட்டின் முன்னேற்றம்.இதுவும் சுதந்திரம் தந்த பெருமை.

எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் சக்தி உலகில் வெகு சில நாட்டு ராணுவ வீரர்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வெகு சில ராணுவத்தில் இந்திய ராணுவம் முதன்மையானது. எதிரியின் துப்பாக்கி குண்டுகளுக்கும் பீரங்கி சத்துக்கும் பயந்து ஓடாத ராணுவம் இந்திய ராணுவம். இதுவும் சுதந்திரம் தந்த பெருமை.

லஞ்ச ஊழல் என்று இந்திய ஆட்சி சில நேரங்களில் தலைகுனித்தாலும், சத்தமில்லாமல் பல இந்திய ஆட்சி பணியாளர்கள் நாட்டிற்கு நல்வழி வகுத்துக்கொண்டுயிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு ஒரு டி.என். சேஷன் போல், காவல்துறைக்கு ஒரு விஜயகுமார் போல் தணிக்கை துறைக்கு ஒரு வினோத் ராய் போல் மகளிர் சக்திக்கு ஒரு கிரண் பேடி போல் இந்திய அரசாங்க பணியாளர்கள் சுதந்திரம் தந்த பெருமை

சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தாநிய வீரர்களை மன்னித்து உயிர் பிட்சை வழங்கி பெருமை இந்தியாவிற்கு கொடுத்தது. இதுவும் நமக்கு சுதந்திரம் தந்த பெருமை. தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை தீவரவாதிகளை ஏவி கொல்லும் எதிரிகளுக்கும் நாம் அமைதி புறாவை தூது அனுப்பும் மனப்பக்குவத்தை கொடுத்து பெருமை சேர்க்கிறது நமது சுதந்திரம்.

யோகா, ஆயுர்வேதம், முன்னோர் வழிபாடு, கடவுள் வழிபாடு, இயற்கை வழிபாடு போன்ற பண்டைய கலாச்சாரத்தை பாதுகாத்து இன்று உலகமே இவற்றை போற்றி பின்பற்றி வருகிறது. இதுவும் நமது சுதந்திரம் தந்த பெருமை.

பல நாடுகளின் அரசியல் சட்டமைப்புகளை ஆராய்ந்து இந்தியாவிற்கு ஏற்ற ஒரு சட்டமைப்பை உருவாக்கி கொடுத்தவர்கள்  நமது சுதந்திர போராட்ட வீரர்கள். இதுவும் நமக்கு சுதந்திரம் தந்த பெருமை.

நீதி துறை நாட்டின் முதுகுஎலும்பாக திகழ்கிறது. ஏழைக்கும் பாலைக்கும் ஒரு அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் அது நீதி துறையினால்தான். இதுவும் நமக்கு சுதந்திரம் தந்த பெருமை.

உற்சாகமான ஊடகம் இந்தியாவின் தனிச்சிறப்பு. பல ஊழல்களையும் இன்னல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெருமை நமது ஊடகங்களுக்கு சாரும். பல சுதந்திர போராட்ட வீரர்கள் ஊடகம் நடத்தி ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தார்கள். இதுவும் நமக்கு சுதந்திரம் தந்த பெருமை.

சாதி வெறி இன்னும் இருந்தாலும் அதன் வீரியத்தை வீழ்த்திய பெருமை நமது சுதந்திரத்திற்கு சாரும்.

பெண்கள் அடிமை ஒழிப்பும் சுதந்திரம்  தந்த பெருமை

விண்வெளி ஆராய்ச்சி அறிவியல் முன்னேற்றும் தொழிநுட்பம் போன்றவை இன்று நமக்கு பெருமை அளிப்பதற்கு மூல காரணம் நமது சுதந்திரம்

நமது பெருமைக்கெல்லாம் அடித்தளம் அமைத்து கொடுத்தது சுதந்திரம்
நமது வளர்ச்சிக்கெல்லாம் வழி வகுத்துக்கொடுத்தது சுதந்திரம்
நமது மகிழ்ச்சிக்கெல்லாம் மார்க்கம் கொடுத்தது சுதந்திரம்
எல்லா பெருமைகளையும் தந்த சுதந்திரத்தை பெருமை அடையச்செய்வோம் !

புத்தகங்களை வசிப்பவர்கள் சக மனிதர்களை நேசிப்பவர்கள்

 புத்தகங்களை வசிப்பவர்கள் 

சக மனிதர்களை நேசிப்பவர்கள்
மற்ற உயிர் இனங்களை மதிப்பவர்கள்
அமைதியை விரும்புவர்கள்
கலாச்சாரதை கட்டிக்காப்பவர்கள்
பண்பாட்டை பாதுகாப்பவர்கள்   


என பல விதமான நற்குணங்களை கொண்டவர்கள். சில வசிப்போர் சமூக நலத்திற்கு எதிராகவும் செயல்படுவார்கள். புத்தகங்கள் உலக சமுதாயம்  என்னும்  விதையின் வளர்ச்சிகாண நீர், உரம், காற்று, வெப்பம் போன்ற மிக அவசியமான தேவை. ஒரு நல்ல புத்தகம் ஒரு கெட்ட குணங்கள் கொண்ட மனிதனை மாற்றி நல்வழிப்படுத்த முடியும். புத்தகங்களின் வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்சிக்கான அறிகுறி. என்ன புத்தகம் வெளிவருகிறது  என்று  சொன்னால் அந்த புத்தகம் வெளியிடுகிற சமூகத்தின் தன்மையை கூறமுடியும். அத்தகைய சக்தி வாய்ந்தது புத்தகம். 



புத்தகங்களின் வரலாறை தோண்டுவது மிகவும் கடினம். ஏன்யென்றால் இன்று இருக்கும் காகித புத்தகங்களுக்கு முன்பு பல விதமான அறிவை வளர்க்கும் வழிகளும், செய்திகளை பரப்பும் உத்திகளும் நிறைந்து காணப்பட்டது.  மனித இனம் தோன்றியதில் இருந்து இன்று வரை ஏதாவது ஒரு வகையில் அறிவும் செய்திகளும் பரவிக் கொண்டே தான் இருந்துயிருக்கிறது. 

அண்டைய காலத்து மேசொபோடமியா  (Mesopotamia) இன்றைய காலத்து ஈராக்கில் ஈர களி மண்ணில் calamus என்ற முக்குவோன வடிவு  கருவியை வைத்து குறியீடுகளை உருவாகினார்கள். ஐத்தையிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த clay tablets என்ற முறை இருந்தது. இவைகள் பத்துஒனெபாதாம் நூற்றாண்டம் வரை உபயோகத்தில் இருந்தது. அசிரியாவின் மன்னர்கள் இந்த     clay tablets களை போகிசமாக பாதுகாத்து வந்தார்கள். இவர்கள் புத்தங்களை வகைபடுத்துதல் (classification) மற்றும்  பதிப்புரிமை போன்றவைக்கு பயிற்சி பட்றைகள் நடத்தினார்கள்.


இதைப்போலேவே நமது ஓலை சுவடிகள். பல்லயிரகனக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஓலை சுவடிகள் தமிழ் கலை, கலாச்சாரம், மருத்துவம், அறிவியல், மற்றும் ஏனைய அறிவு பாடங்களை அற்புதமாக ஓலை சுவடியில் படைதிருக்கிறார்கள்.

இன்று e புக்கள் வந்து விட்டன. உலகத்தில் எந்த முலையில் இருந்தாலும் நமது இனிய  தமிழ் மொழி ஆனாலும் சரி மாற்ற மொழியானாலும் சரி நாம் இ  புத்தங்களை கொண்டு படிக்கமுடியும். இதற்கு இடம், காலம், நேரம், மொழி போன்ற வேறுபாடுகள் கிடையாது.  

தமிழ் சமுதாயத்திற்கு உலக பெருமை வாங்கி தந்தது திருவள்ளுவரின் திருக்குறள். இரண்டு அடியில் உலககிற்கு யாவற்றையும் எடுத்து உணர்த்திய உலக பொதுமுறை திருக்குறள். வியக்காத ஆள்யில்லை; குறிபிடாத அகில உலக அறிஞர்கள் இல்லை. நான் புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து கொண்டு யிருந்த போது என்னுடைய துணை வேந்தர் அவர்கள் அன்றைய குடியரசு தலைவர் டாக்டர்.ஷங்கர் தாயால் ஷர்மாவை உலகம் ஒரு குடும்பம் என்ற  கருத்தரங்கதிற்கு  அழைப்பதற்காக என்னை அழைத்து சென்றார். நான் தமிழன் என்று அறிந்த நமது குடியரசு தலைவர் என்னிடம் கேட்டார் "திருவள்ளுவர் உலகம் ஒரு குடும்பம் என்பதை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று வினவினார். எனக்கு தெரியவில்லை என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னார் "திருவள்ளுவர் சொல்லாத நல்ல செய்தி உலகில் ஏதுவும் இல்லை" உண்மை தான். நமது தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள் அற்புதமான அறிவை கொடுத்தது, கொடுத்துக் கொண்டுயிருக்கிறது  கொடுக்கும்.

எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு

பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தமணி, குண்டலகேசி மற்றும் வளையாபதி போன்ற காப்பிய இலக்கியங்கள் தமிழில் இருப்பது நமக்கெல்லாம் சிறப்பு.

நமது இலக்கியங்களை வசிப்போம்; இதயத்திற்கு இதமளிபோம்; இனங்கள் எல்லாவற்றையும் நேசிபோம்.    

தமிழ் மக்களின் மனதை தொட்ட நிறைய புத்தகங்கள் குவிந்து கிடக்கிறது. அதில் சிலவற்றை நான் சொல்கிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன். இதை பெரும்பாலும் தமிழ் குடும்பங்கள் ஒரு தெய்விக நூலைப் போல் படித்து பாதுகாத்து வருகிறார்கள்.

கதையையும் நிஜமாக நம் கண் முன்னால் நிறுத்தகூடிய சக்தி வாய்ந்த சாண்டில்யனின் கடல் புறா

நமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் கட்டிக் காக்கா உந்து சக்தியாக விளங்கும் கவிஞர் கண்ணதாசனின் அர்தமுள்ள ஹிந்து மதம்.

மு.மேத்தாவின் சோழ நிலா

சுஜாதாவின் கம்ப்யூட்டர் கிராமம்

அப்துல் ரகுமாமானின் கவிதைகள். குறிப்பாக  பூக்காலம்
 
கவிபேரசுவின் மூன்றாம் உலக போர் 

தமிழருவி மணியனின் ஊருக்கு நல்லது செய்வேன்

s .ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், கதாவிலாசம்

ஆங்கிலத்தில்  ஜேர்மன் நாட்டின் theodore adorno max horkheimer  எழுதிய dialectic englightenment . 1944 ல் வெளிவந்த இந்த புத்தகம் ஒரு பேரறிவு தாக்கத்தை உண்டாக்கும். மிக அற்புதமாக சமூக மாற்றத்தை வசைப்பாடியிருக்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் எழுதிய பொருளாதார தத்துவத்தை அவர்களுடைய காலத்திற்கு தகுந்த மாதரி என்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை விளக்கி இருப்பார்கள்.

டேனியல் பெல்லின் தி Post Industrial சொசிஎட்டி
Alvin Toffler இன் third wave, future shock
Robert Naisibitt Mega  Trends     
Erick Fomm in தி Sane Society    
ஹில்லரி  rose இன் love, power & knowledge
பிரான்சிஸ்  fukyuma வின் the great disruption

  
வளர்ந்து வரும் உலக வன்முறைகளும் தீவிரவதாங்களும் கூண்டொடு அழிய வேண்டுமென்றல், அகிலம் முழுவதும் அன்பு பரவ வேண்டுமேன்றால்   புத்தங்களை வசிபோம்; சக மனிதர்களை நேசிபோம்.    

அடுத்த அடி

 அடுத்த அடி 


பல வருட கனவுகளுக்கு பின்பும், இரண்டு வருட கடின உழைப்புக்கு பின்பும் பனிரென்டாம் வகுப்பில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் மாணவ செல்வங்களே வணக்கம். வாழ்த்துக்கள். 

உங்களுடைய மகிழ்ச்சிக்கு பின்னால் கவலையும் படிந்துயிருப்பதை என்னால் அறியமுடிகிறது. அடுத்த அடி வைப்பதற்கு முன் பல யோசனைகள்  உங்களுக்கு இருக்கும்.

என்ன பட்டப்படிப்பு படிக்கலாம்? அந்த பட்டப்படிப்புக்கு பிறகு என்ன எதிர்காலம் இருக்கிறது? வேலை கிடைக்குமா? கிடைத்தாலும் நல்ல சம்பளம் கிடைக்குமா? போன்ற கேள்விகள் உங்களிடையே நிறைய இருக்கும். எல்லா கேள்விகளுக்கும்  பதில் சொல்வதற்கும் உங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டியிடவும் இந்த நிகழ்ச்சி அமையும் என நம்புகிறேன்.

கல்லூரி படிப்பு என்பது உங்கள் வாழ்கையில் ஒரு மிக முக்கியமான தருணம்.இதுவரை பெற்றோரரின் முழு பாதுகாப்பிலும் பள்ளியின் கட்டுப்பாட்டில் இருந்த உங்களுக்கு கல்லூரியில் நுழையும் போது நிறைய சுதந்திரம் கிடைக்கும். இந்த சுதந்திரத்துடன் முழு பொறுப்பும் வரவிருக்கிறது. உங்கள் வாழ்க்கையை  சீராகவும் செழிப்பாகவும் அமைத்து கொள்வது உங்களுடைய கடமை.

பட்டப்படிப்பு என்பது வாழ்கையில் முன்னேர்வதற்கு ஒரு ஏணி.
அந்த ஏணியை வைத்து கொண்டு நீங்கள் மேலும் உயரவேண்டும்.   அதற்குகாக உங்களுக்கு தகுந்த துறையை தேர்ந்துயெடுக்க வேண்டும். நேரத்தை வீணாக்கதிர்கள்

கலை மற்றும் அறிவியல்துறைகள் உலகில் எப்பொதும் வரவேற்க்கபடுகிறது. B.A English, தமிழ், ஹிந்தி, சமஸ்க்ரிதம், ஹிஸ்டரி, பிலோசொபி,எகாநோமிக்ஸ், சைகோலஜி, சமூகவியல், political science, journalism, social work B.P.ED, B.LIBS,   B.Com, B.Com C.A, corporate  secretaryship,  BBA, B.SC  இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கணினிவியல்,  உயிர் தொழில்நுட்பம், மைக்ரோ பயோலாஜி, Visual Communication, fashion technology, nutrition,dietetics, Hotel Management, catering sciences, Acturial Sciences, information technology,  environmental sciences, bio informatics, statistics, BCA, BFA,   போன்ற பட்டப்படிப்புகள் இருக்கிறது. இவை பெரும்பாலும் மூன்று வருட படிப்புக்கள்தான்.

எப்படி பட்டப்படிப்பு முக்கியோமோ அதைப்போல் படிக்கும் கல்லூரியும் மிக முக்கியம். நல்ல பேரசிராயர்களையும் சூழ்நிலைகளையும்  கொண்ட கல்லூரியை தேர்ந்து எடுக்கவேண்டும். பல வருடங்கள் கண்ட கல்லூரி, தேசிய தர மற்றும் கட்டுப்பட்டு குழுமத்தால்  மதிப்பீடு செய்யப்பட்டு "A" தரம் பெற்றுயிருந்தால் மிகவும் நன்று. கல்லூரியின் பழைய மாணவர்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை பற்றியும் அறியவேண்டும். அவர்களின் வளர்ச்சியில் கல்லூரியின் பங்குயை அறிய வேண்டும்.

இந்நாள் மாணவர்களை கண்டு அவர்களிடம் கல்லூரியில் நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களுடைய அணுபவம் உங்களுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியம். பேராசிரியர்கள் எப்படி, பாடம் எப்படி, கல்லூரியில் இருக்கும் ஏனைய முன்னேற்ற பாதைகள் என்ன என்ன, திறன் மேம்பாட்டு திட்டங்கள் என்ன, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது எப்படி, விளையாட்டு துறையில் என்ன வசதிகள் கல்லூரியில் இருக்கிறது போன்று கேள்விகளை நீங்கள் இந்நாள் மாணவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

விடுதியில் தங்கி படிக்க நினைக்கும் மாணவர்கள் அங்குள்ள சௌரியங்களையும்   அசௌரியங்களையும் அறிந்து  கொள்ளவேண்டும். ராக்கிங் என்பது இப்பொது வெகுவாக குறைந்து இருந்தாலும் புதிய மாணவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும். ராக்கிங் எதுவும் இருப்பின் உடனடியாக கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளரிடம் எடுத்து செல்ல வேண்டும்.



கல்லூரியில் படிக்கும் போது பல வித திறமைகளை நீங்கள் மேம்படுத்தி  கொள்ள வேண்டும். இசை, நடனம், உடற்பயற்சி, யோகா, விளையாட்டு, பேச்சு பட்டறை, கவிதை, கட்டுரை எழுதுவது, பொது அறிவை வள்ளர்பது, புத்தாக்க கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு படிப்புகள் என நீங்கள் உங்களை தூங்குகிற நேரத்தை தவிர மற்ற நேரங்களில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

நீங்கள் ஊக்கத்தொகை  (scholarship) பெற்று பட்டப்படிப்பையும் மேற்ப்படிப்பையும் தொடரவேண்டும். ஊக்கத்தொகை பெறுவதால் உங்களுக்கு அதிக பொறுப்பு வரும். அது உங்களுக்கு ஒரு ஆண்டு தோறும் முன்னேற்றம் அடைவதற்கு வழிவகை செய்யும். உங்களுடைய பெற்றோரை நிதி தேவைகளுக்கு சர்ந்துயிருப்பதை சற்று குறைக்கும்.

ஊக்கத்தொகை  பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் அல்லது தினசரிகளை பார்ப்பது அவசியம்.

நேரத்தை சமாளிக்க தெரிந்தவர்கள் பகுதி நேர வேலைக்கும் செல்லாம்.

ஒவ்வாரு துறைக்கும் தனித்துவம் இருக்கிறது. பட்டப்படிப்பு முடித்த பிறகு பள்ளிகளில் ஆசிரியராக சேரலாம். அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு சேரலாம். மருந்து மற்றும் வேதியல் பொருள்கள் விற்பனையாளராக செல்லலாம். B .Com முடித்த மாணவர்கள் வணிக இல்லங்களில் கணக்கு பார்பதற்கு சேரலாம். sales மற்றும் marketingக்கு செல்லலாம். கணினிவியல் முடித்த மாணவர்கள் மென்பொருள் தயார்பிதலும் வன்பொருள் சரிசெய்வதிலும் சேரலாம். முதுகலை படிப்புக்கும் சேரலாம். ஆசிரியர் பயற்சி படிப்பு (B.Ed) சேரலாம், சட்டம் பயலாலம். முதுகலை மற்றும் ஆய்வு படிப்புக்கும் செல்ல விருப்பம் உள்ள மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் பேராசிரியர் பணிக்கு செல்லலாம்.

பட்டப்படிப்பு முடித்த பிறகு மூன்று வித வழிகள் இருக்கிறது. ஒன்று  வேலைக்கு செல்வது. இரண்டு, மேற்ப்படிப்புக்கு செல்வது. மூன்றாவது, போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது.

இதில் எந்த வழி உங்களுக்கு உங்கந்தது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.தயவு செய்து குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டாம். இந்த மூன்று வழிகளில் ஒன்றை தேர்ந்துயெடுக்கும் போது உங்களுடைய குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிகளில் நட்டமும் வசதியும் இல்லாதவர்களுக்கு முதல் வழியே சல சிறந்தது. வேலையில் சேர்வதன் மூலம் வருமானம் மட்டுமின்றி வாழ்கைக்கு தேவையான அனுபவங்களும் கிடைக்கும். வேலை செய்துக்கொண்டும் மேற்படிப்பு படிக்கலாம். சில வருடங்கள் பணியாற்றிவிட்டு மேற்படிப்புக்கும்  செல்லலாம்.

வெளிநாட்டுக்கு சென்றும் பட்டப்படிப்பு படிக்கலாம். இது உங்களுக்கு உலக அணுபவத்தை கொடுத்தாலும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இன்றைய சூழலில் வெளிநாடுகளில் படிப்பது பாதுகாப்பு மிகவும் சவாலாக இருக்கிறது. அதனால் மாணவர்கள் பட்டப்படிப்பை உள்நாட்டில் படிப்பது நல்லது.

தகவல் தொழிநுட்ப உபகாரணங்களை பயன்படுத்துவதை நீங்கள் மிதமாக பயன்படுத்தவேண்டும். நீண்ட நேரங்கள் கைப்பேசி, மடிக்கணினி மற்றும் கணினி பயன்படுத்துவதால் உடல் நலம் சிதைவது மட்டுமின்றி வாழ்க்கையில் பல சிக்கல்களை உண்டுப்பணும். நிறைய மாணவர்கள் தகவல் தொழிற்நுட்ப உபகாரணங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் உடல் நலம் வெகுவாக பாதிப்பது மற்றுமின்றி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் வெகுவாக பாதிக்கிறது.

ஆகையால் மாணவர்கள் தகவல் தொழிநுட்ப உபகாரணங்களை உபயோகப்படுதுவத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

கல்லூரியில் படிக்கும் போது மற்ற கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் அவசியம் கலந்து கொள்ளவேண்டும். மற்ற கல்லூரிகளுக்கு செல்லும் போது உங்களுக்கு நிறைய புது அணுபவங்கள் கிடைக்கும். அந்த கல்லூரியில் நடக்கும் புதிய திட்டங்கள் நடைமுறைகள் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அறிவும் விரிவுவடையும். உங்கள் கல்லூரியில் இல்லாத சில நல்ல விஷியங்கள் உங்களுக்கு புரியம். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் நல்ல நண்பர்களை தேர்ந்துயெடுங்கள்.

இப்படி நீங்கள் வெளியில் செல்லும் போது திடமான அணுபவங்குகளும் அறிவும் கிடைக்கும். கருத்தரங்கள், மாநாடுகள், கலந்துக் கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்க வேண்டும். ஆய்விதல்களில் (Journal) கட்டுரை எழுத வேண்டும்.

நூலகம் என்பது ஒவ்வாரு மாணவரின் வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான அங்கம். பள்ளிக்கூட படிப்பில் ஆசிரியர்கள் நடத்தும் படத்தையும் கொடுத்திருக்கிற புத்தகத்தை படித்தால் மட்டும் போதுமானதாக இருக்கும். ஆனால் கல்லூரியில் நீங்கள் பேராசிரியர் நடத்தும் பாடத்தை பல புத்தகங்களை படித்து உங்களுடைய கருத்துகளை பதியவேண்டும். இதற்கு நூலகம் செல்வது அவசியம். பாடம் சம்பந்தப்பட்டபுத்தகங்களை தவிர பொது அறிவை வள்ளர்கும் புத்தகங்களையும் படிக்க வேண்டும். தினசரிகள், வார இதழ்கள், மாத இதழ்கள், journals, encyclopedia போன்றவைகளை நூலகத்தில் படிக்கலாம். இப்பொது digital லைப்ரரி வந்துவிட்டது. இதன் மூலம் உலகில் உள்ள எல்லா புத்தகங்கள், journals, encyclopedia, magazines படிக்க முடியும். தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் நூலகத்தில் படிக்க வேண்டும்.

கல்லூரியில் பல வித மன்றங்கள் மற்றும் சங்கங்கள் இருக்கும். குறிப்பாக பசுமை மன்றம் (Environment Club), யூத் ரெட் கிராஸ், Rotaract கிளப், லியோ கிளப், social club இருக்கிறது. இவை இல்லாமல் NCC, NSS போன்றவையும் உள்ளது. இவை ஒன்றில் சேருவது கட்டாயம். இதற்கு மதிப்பெண்களும் உண்டு. மன்றங்களும் சங்ககளும் ஒவ்வாரு மாணவரின் வாழ்க்கையின் வள்ளர்ச்சியில் முக்கிய பங்கு வகுக்கிறது.


கணினி ஆய்வு கூடம் நிறைய கல்லூரிகளில் இருக்கிறது. இங்கு உங்களுக்கு இணையத்தள வசதிகளும் இருக்கும். கணினி இன்று ஒரு தவிரக்க முடியாத சக்தியாக மாறிவிட் டது. கணினி அறிவு பெறுவது முதல் கடமையாக இருக்கிறது. ஆனால் கணினியில் அதிக நேரம் தொடர்ந்து செலவழிப்பதை தவிர்க்கவும்.

பட்டப்படிப்பு ஒரு அங்கீகாரம் தானே தவிர அது மட்டும் ம் வைத்து கொண்டு உங்களுக்கு எல்லா மதிப்பும் கிடைக்காது. வாழ்க்கையின் உண்மையான வளர்ச்சிக்கு உங்களுக்கு ஆளுமை (Personality) திறன் இருக்கவேண்டும். இதை நீங்கள் படிக்கும் போதே வளர்த்து கொள்ளவேண்டும்.

பட்டப்படிப்புடன் ஆளுமை திறன், தகவல் தொடர்பு திறன், நம்பிக்கை நிலை  (confidence level), பண்பாட்டு திறன் (Cultural skill), தொழில்நுட்ப திறன் (Technology skill) போன்றவை இருந்தால் உலகம் உங்கள் கையில்.